"இனியொரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்"!!
"வருங்கால சமுதாயத்திற்கு
தூய்மையான சுற்றுப்புறத்தை
நாம் ஒப்படைப்போம்"!!
இறைவன் கொடுத்த வரம்
இயற்கை நமக்கு நலம்
உலகோடு உறவு
இயற்கையோ ஏன் பிரிவு
உதவும் கரங்லளை வெட்டுவோமா?
பாதுகாக்கும் பெற்றோரை
அடியோடு தவிர்ப்போமா?
அன்னையாய் தந்தையாய்
விளங்கும் இயற்கையை
ஏனோ? அழிக்கின்றோம்?
சுவாசமே காற்று, உணவே நீர்
உறைவிடமோ பூதமண்டலம்!!
இவைகளை அழித்தால்
எங்கே வாழ்வோம்?
எப்படி மகிழ்வோம்?
கண்களை விற்று சித்திரம்
வாங்குவோம்? ஆம்
அதுபோல இம்மண்ணை விற்று
மனிதா! நீ ஏன் அறிவியல் படைத்தாய்?
நம் விரலைக்கொண்டே
நம் கண்களைக் குத்திக்கொள்கிறோமே!!
எழுங்கள்! எண்ணங்கள்
இயற்கையின் அழிவிற்கு தடை விதியுங்கள்!!
பாதுகாக்க படை திரட்டுங்கள்!
ஏனெனில் இயற்கையே இன்பம்!
இயற்கையே நமக்கு வரம்!
இயற்கையே நம் எதிர்கால வாழ்வு!
அருமையான தகவல் நன்றி
ReplyDelete